ஆப்நகரம்

மோடி அரசுக்கு பெரிய சோதனை; சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த ஷாக்!

பெகாசஸ் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

Samayam Tamil 22 Jul 2021, 9:25 am

ஹைலைட்ஸ்:

  • இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம்
  • தன் மீது களங்கத்தை துடைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது
  • இஸ்ரேல் அரசுக்கு கடிதம் எழுதி உண்மையை கண்டறிய வேண்டும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Swamy
இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் பின்னணியில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரத்தை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அமளி

இதனால் கூட்டத்தொடரை நடத்த முடியாமல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தவே இல்லை. திட்டமிட்டே மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இது அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் அமைச்சர்கள், தேர்தல் ஆணையர், நீதிபதிகள், தலைவர்கள், பத்திரிகையாளர்கள்,
உடையும் கூட்டணி; தனித்து போட்டியிட காங்கிரஸ் போட்ட மாஸ்டர் பிளான்!
பெகாசஸ் பின்னணி என்ன?

சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்து உளவு பார்த்ததை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இதன் பின்னணி உண்மையை கண்டறிய உடனடியாக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விஷயத்தில் தங்களுக்கு தொடர்பில்லை எனில் அதனை ஆதாரப்பூர்வ நிரூபிக்கவும், வேறு யார் இதனை செய்துள்ளார்கள்

சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

என்பதையும் கண்டறிய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவை எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், பிரதமர் மோடி அரசிற்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை எனில், உடனடியாக இஸ்ரேல் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். பணம் கொடுத்தால் யாருக்காகவும் வேலை செய்யும் நிறுவனமாகவே என்.எஸ்.ஓ இருக்கிறது.

எனவே இந்திய அரசு பணம் கொடுக்கவில்லை எனில் வேறு யார் பணம் கொடுத்து இந்தியர்களை உளவு பார்க்கச் சொன்னது என்று கண்டறியப்பட வேண்டும். இந்த உண்மையை இந்திய மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை மோடி அரசுக்கு இருக்கிறது. இல்லையெனில் அமெரிக்காவில் நடந்த ’வாட்டர்கேட்’ ஊழல் போன்று பாஜகவிற்கு பெரும் சோதனையாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி