ஆப்நகரம்

எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் காத்த மக்கள்; மன் கி பாத் உரையில் மோடி புகழாரம்!

பொதுமக்களுடன் உரையாடும் பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை இன்று ஒலிபரப்பப்பட்டது.

TNN 25 Jun 2017, 12:41 pm
டெல்லி: பொதுமக்களுடன் உரையாடும் பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை இன்று ஒலிபரப்பப்பட்டது.
Samayam Tamil pm modi speaks about emergency period in maan ki baat
எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் காத்த மக்கள்; மன் கி பாத் உரையில் மோடி புகழாரம்!


இந்தியாவின் பல மாநிலங்களில் ஜெகந்நாதர் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. அதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்தார். 100 மணி நேரத்தில் 10 லட்சம் கழிவறைகள் கட்டிய விசாகப்பட்டினம் மக்கள், அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் கூறினார்.

கடந்த 1975ஆம் ஆண்டு ஜூன் 25 நள்ளிரவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இந்தியாவின் இருண்ட காலத்திலும், ஜனநாயகத்தை காப்பாற்றியவர்கள் மக்கள் என்று புகழாரம் சூட்டினார். யோகா உலகை ஒன்றிணைத்தது என்று குறிப்பிட்டார். இஸ்ரோ வெற்றிகரமாக ஏவிய கார்டசோட் செயற்கைக் கோள் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இந்திய தொடர்ந்து முன்னேறி வருவதைச் சுட்டிக் காட்டினார்.

PM Modi speaks about Emergency period in Maan Ki Baat.

அடுத்த செய்தி