ஆப்நகரம்

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது மிஸ்டர் மோடி; சோனியா காந்தியின் சரவெடி பிரச்சாரம்!

பிரதமர் மோடி வெறும் வாய் சவடால் மட்டுமே என்று சோனியா காந்தி பேசியுள்ளார்.

Samayam Tamil 9 May 2018, 1:50 am
பெங்களூரு: பிரதமர் மோடி வெறும் வாய் சவடால் மட்டுமே என்று சோனியா காந்தி பேசியுள்ளார்.
Samayam Tamil Sonia Gandhi
சோனியா காந்தி


வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதையொட்டி கர்நாடகாவில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பிஜாப்பூரில் உள்ள சரவாடா கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கர்நாடகாவின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கடுமையாக உழைத்து வருகிறது. அரசின் பல நல்ல திட்டங்களால் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது.

ஏழைகளுக்காக மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கர்நாடக விவசாயிகள் வறட்சியால் தவித்து கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது.

ஆனால் மோடி மறுத்துவிட்டார். விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது பாஜக. பிரதமர் மோடி நடிகரைப் போல பேசி வருகிறார்.

அவரது பேச்சு மக்களின் பசியைப் போக்க உதவாது. வேலைவாய்ப்பைப் பெற்றுத் தராது என்று சோனியா காந்தி கூறினார்.

PM Modi speaks like an actor but his speeches cannot fill empty stomachs says Sonia Gandhi.

அடுத்த செய்தி