ஆப்நகரம்

மகாகவி பாரதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன் நான்: பிரதமர் மோடி பெருமிதம்!

மகாகவி பாரதியுடன் நெருங்கிய தொடர்பு தமக்கு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 11 Dec 2020, 9:23 pm
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138ஆவது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சர்வதேச பாரதி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவானது வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இணையவழியில் பாரதி திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


தொடக்க விழா நாளான இன்று தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பக்தி, புரட்சி, காதல், தியாகம், அரசியல் கவிதை உள்ளிட்டவற்றில் பாரதி சிறந்து விளங்கினார். பாரதி வாழ்ந்த இல்லத்தை ஜெயலலிதா, நினைவிடமாக மாற்றினார். பாரதியின் கொள்கைகளை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது” என்றார்.

அதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, “ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி. பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார். தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்து பேசியவர் பாரதி. பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார் பாரதி” என்றார்.

கொரோனாவால் பணக்காரர்களான இந்திய பெண்கள்!

பாரதி வாரணாசியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என தெரிவித்த பிரதமர் மோடி, அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக தான் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி பேசுகையில், “நம் இளைஞர்கள் பாரதியாரிடமிருந்து நிறைய கற்க முடியும். குறிப்பாக, துணிச்சலைக் கற்கலாம். பாரதியை எந்த ஒரு தொழிலுக்குள்ளும் பரிமாணத்திற்குள்ளும் அடைக்க முடியாது. அவர் பண்முகத்தன்மை கொண்டவர்” என்றார்.

முன்னதாக, தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்ற பாரதியின் வரிகளை தமிழில் உச்சரித்து அதன் விளக்கத்தையும் பிரதமர் மோடி அளித்தார். அவர் இந்த வரிகளை பேசிக் கொண்டிருந்த அதே வேளையில், நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகள் டெல்லி வீதிகளில் போராடிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி