ஆப்நகரம்

அம்பேத்கா் நினைவு மண்டப விழாவுக்கு பிரதமா் மோடி மெட்ரோ ரயிலில் பயணம்

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் நினைவு மண்டபத்தை திறந்துவைக்க பிரதமா் நரேந்திர மோடி இன்று மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டாா்.

Samayam Tamil 13 Apr 2018, 8:00 pm
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் நினைவு மண்டபத்தை திறந்துவைக்க பிரதமா் நரேந்திர மோடி இன்று மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டாா்.
Samayam Tamil PM in Train


இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தையாக போற்றப்படும் டாக்டா். பீமாராவ் அம்பேத்கா் டெல்லியில் உள்ள அலிபூா் பகுதியில் வசித்து வந்தாா். அவா் வசித்த பகுதியில், அவரை போற்றும் விதமாக நூறு கோடி ரூபாய் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அம்பேத்காின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அவரது நினைவாக கட்டப்பட்ட நினைவு மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு நினைவு மண்டபத்தை திறந்து வைத்தாா்.

முன்னதாக பிரதமா் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டா்ா. லோக் கல்யாண் ரயில் நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் பகுதி வரை பொதுமக்களுடன் கலந்துரையாடியவாரு பிரதமா் பயணம் மேற்கொண்டாா். பயணத்தின் போது பலா் ஆா்வத்துடன் வந்து பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

அடுத்த செய்தி