ஆப்நகரம்

வாஜ்பாய் சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்

Samayam Tamil 24 Dec 2019, 6:35 pm
லக்னோ: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.
Samayam Tamil வாஜ்பாய் சிலை
வாஜ்பாய் சிலை


பாஜகவின் முகமாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் கமென்ட்... நெட்டிசனை தூக்கிச் சென்று மொட்டை அடித்த கட்சித் தொண்டர்கள்!!

இந்த சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச ஆளுநர் அனந்தி பென் பாட்டீல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதால் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளை விட கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோப்பநாய்கள், டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனைகள் நடைபெற்று வருகின்றன

அடுத்த செய்தி