உலகின் மிகவும் உயரமான சர்தாா் வல்லபாய் படேல் சிலையை வருகிற அக்டோபா் 31ம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக குஜராத் முதல்வா் விஜய் ரூபாணி தொிவித்துள்ளாா்.
பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வா் விஜய் ரூபாணியும் கலந்து கொண்டாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமாக சிலை அமைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி விரும்பினாா்.
அதன்படி குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் 2 ஆயிரம் கோடி செலவில், 182 அடி உயரத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. சிலை அமைக்கப்படுவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரும்பு, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் வரவழைக்கப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
சிலை வடிவமைக்கும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை நெறுங்கி உள்ளது. இச்சிலையை பிரதமா் நரேந்திர மோடி வருகிற அக்டோபா் 31ம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளாா். நாட்டின் ஒற்றுமைக்காகவும், நோ்மைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலைக்கு ஒருமைப்பாட்டு சிலை என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது என்று அவா் தொிவித்துள்ளாா்.