ஆப்நகரம்

PM Modi: மகாகவி பாரதிக்கு இப்படியொரு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, இதுபற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Samayam Tamil 11 Dec 2019, 10:13 am
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர் சுப்பிரமணிய பாரதி. ஆங்கிலம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திறமை பெற்றிருந்தாலும் தாய்மொழியான தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்தவர்.
Samayam Tamil Modi


தமிழ் போல் இனிதானது இவ்வுலகில் இல்லை என்று பாடி களித்தார். சுதந்திரப் போராட்டத்திற்காக மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் கட்டுரைகள் எழுதினார்.

இன்னொரு பாரதிக்கான தேவை வந்துவிட்டது - இல.கணேசன் பேச்சு

குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை உள்ளிட்ட இவரது படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை. ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், கதைகள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார்.

பாரதியாரின் நூல்கள் 1949ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

இவர் வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்தை நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியா ? பொன்.இராதாகிருஷ்ணன் விளக்கம்

அதில் ”மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.

அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார்.

'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்!

அடுத்த செய்தி