ஆப்நகரம்

இரும்பு மனிதருக்குத் தலைவணங்குவோம்: பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்குத் தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 31 Oct 2018, 8:39 am
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்குத் தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil modi-patel


இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை நதிக்கரையில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. 33 மாதங்களாக வடிவமைக்கப்பட்ட இச்சிலை தான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.

சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று (31ம் தேதி) சிலை அா்ப்பணிக்கப்படுகிறது. இச்சிலைக்கு “ஒற்றுமையின் சிலை” (Statue of Unity) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனிடையே ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கி, நாட்டுக்காக அயராது உழைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு அவரது பிறந்தநாளில் தலைவணங்குகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளும் இன்றுதான். இதனால், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவோம்" எனவும் பிரதமர் மோடி மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி