ஆப்நகரம்

அடுத்த கட்ட தளர்வுகள் எப்போது? முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஒட்டி, மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 21 Sep 2020, 8:15 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 54,85,612 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் 43,92,650 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 87,909 பேர் பலியாகியுள்ளனர். 10,04,274 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 12,08,642 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் 6,25,514 பேரும், தமிழ்நாட்டில் 5,41,993 பேரும், கர்நாடகாவில் 5,19,537 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 3,54,275 பேரும், டெல்லியில் 2,46,711 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பாக, மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil PM Modi Meets CMs


அந்த வகையில் நாட்டில் அதிக நோய்த்தொற்று உள்ள 7 மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி வரும் புதன் அன்று(செப்டம்பர் 23) வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அடங்கும். இவற்றில் அதிகப்படியான புதிய பாதிப்புகளும், பலி எண்ணிக்கையும் பதிவாகியுள்ளன.

இனிமே பிரச்சினை இல்லை; கொரோனா தடுப்பூசி குறித்து மகிழ்ச்சி அறிவிப்பு!

இதன் தொடர்ச்சியாக அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் டெல்லி முதல்வரும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆக்சிஜன் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இங்கு பலி விகிதம் 3 சதவீதமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதேசமயம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான நோய்த்தொற்று நிலவுகிறது. இவை தொடர்ச்சியான பாதிப்புகளை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவில் மட்டும் 40 சதவீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் புதிதாக 92,605 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 52 சதவீதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளன. அதாவது மகாராஷ்டிரா 22.16 சதவீதம், கர்நாடகா 9.03 சதவீதம், ஆந்திரப் பிரதேசம் 8.9 சதவீதம், உத்தரப்பிரதேசம் 6.2 சதவீதம், தமிழ்நாடு 6 சதவீத பாதிப்புகளைக் கொண்டுள்ளன. புதிய பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முன்னிலை வகிக்கிறது. நேற்று புதிதாக 1,133 பேர் பலியாகியுள்ளனர். இதில் 37 சதவீதம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் இன்று திறப்பு: எந்தெந்த மாநிலங்கள் ரெடி? - முழு விவரம் உள்ளே!

இதற்கடுத்த இடங்களில் உள்ள கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் பலி எண்ணிக்கையை மகாராஷ்டிரா கொண்டுள்ளது.

அடுத்த செய்தி