ஆப்நகரம்

பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்டில் இஸ்ரோ அனுப்பிய இரண்டு வெளிநாட்டு செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Sep 2018, 1:08 am
பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்டில் இஸ்ரோ அனுப்பிய இரண்டு வெளிநாட்டு செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil real-raven
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


புவி கண்காணிப்புக்கான இரண்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இங்கிலாந்தை சேர்ந்த நோவா எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் ஒன் ஃபோர் என்ற இரண்டு செயற்கைக் கோள்களை இந்தியா வர்த்தக நோக்கில் விண்ணில் ஏவியது. இதில் 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ்.ஏ.ஆர் செயற்கைக்கோளானது இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், பனிப்படலம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிக்கு உரியது.



444 கிலோ எடை கொண்ட எஸ் ஒன் ஃபோர் என்ற மற்றொரு செயற்கைக்கோள், பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுவது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த இரு செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.விசி-42 ராக்கெட் மூலம் சரியாக இன்று இரவு 10.07 மணிக்கு ஏவப்பட்டன.

இந்நிலையில் பூமியிலிருந்து 538 கி.மீ தொலைவில் வெறும் 17 நிமிடங்களில் இரண்டு செய்ற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிக்கரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதை இஸ்ரோ ஆய்வு மையம் உறுதிசெய்தது.

இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, செயற்கைக்கோள்களை வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி