ஆப்நகரம்

இந்தியாவின் உண்மை திறனை உலகம் அறிய வாய்ப்பு ஏற்படுத்துவேன்: பிரதமர் மோடி

''இந்தியாவின் உண்மை முகத்தையும், திறனையும் உலகம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நான் ஏற்படுத்துவேன் என்பதற்கான உறுதி அளிக்கிறேன்'' என்று இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறினார்.

Samayam Tamil 21 Jan 2018, 10:29 pm
''இந்தியாவின் உண்மை முகத்தையும், திறனையும் உலகம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நான் ஏற்படுத்துவேன் என்பதற்கான உறுதி அளிக்கிறேன்'' என்று இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறினார்.
Samayam Tamil pm modis interview with times now highlights
இந்தியாவின் உண்மை திறனை உலகம் அறிய வாய்ப்பு ஏற்படுத்துவேன்: பிரதமர் மோடி


பேட்டியில் இருந்து சில துளிகள் இங்கே:

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3,30,00,000 குடும்பங்களுக்கு காஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது வேலை எளிதாக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வர்த்தகம் செய்வதை எளிதாக்கியுள்ளோம். இதையடுத்து இந்தியா 42வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது எங்களது ஆட்சியின் மிகப் பெரிய சாதனை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு நாடு ஒரு வரி என்பதுதான் அது. சர்தார் வல்லபாய் பட்டேலின் மிகப்பெரிய சாதனைகளும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே இருந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்தியா பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்திய கூட்டமைப்பின் மீது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதுடன், ஆர்பிஐ-யின் நடவடிக்கைகள் மறுவடிவமைப்பு பெற்றுள்ளது. இந்திய நாடாளுமன்றம் ஜிஎஸ்டி வரியை 7 ஆண்டுகள் விவாதம் செய்தது. இதுபோன்று வேறு எதற்கும் செய்தது இல்லை.

எனது நாட்டு மக்கள் எனக்கு கொடுக்கும் சான்றிதழ் மிகப் பெரிய சான்றிதழ். எனக்கு அது கிடைத்துள்ளது. எனது அரசு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து தரப்பிலும், அனைத்து மட்டத்திலும் பாராட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி அமைப்பு, உலக வங்கி, மூடி, கிரட்டி ரேட்டிங் ஏஜென்டுகள் என அனைவரும் எனது அரசுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். உலக விவகாரங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து எழுதுபவர்கள் எனது அரசு பற்றி நல்ல செய்திகளை கூறியுள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த செய்தி