ஆப்நகரம்

நாட்டு மக்களுக்கு இன்று உரை: மோடி வைத்த ட்விஸ்ட்!

நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.

Samayam Tamil 20 Oct 2020, 3:31 pm
ஒரு தகவலுடன் நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றவுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil modi speech



கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வந்தார்.

மான்கிபாத் நிகழ்ச்சி வாயிலாகவும் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை மக்களிடம் உரையாற்றுவதாக கூறியுள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள்: இதுதான் காரணம்!

கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில் பொது முடக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவாரா, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் அது குறித்துப் பேசப்போகிறாரா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி