ஆப்நகரம்

PM Modi: நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசின் அதிரடிகள் இதோ; சுதந்திர தினத்தில் பிரதமர் உரை- முழு விவரம்...!

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை ஒட்டி, செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Samayam Tamil 15 Aug 2019, 9:04 am
செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை 6வது முறையாக ஏற்றி வைத்த பிரதமர் மோடி, பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசுகையில், நமது நாட்டில் புதிய அரசு பதவியேற்று இன்னும் 10 வாரங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டு மக்களுக்கு முழு அர்ப்பணிப்பு உடன் சேவையாற்ற உள்ளோம்.
Samayam Tamil PM Modi


இதற்காக பல புதிய திட்டங்களை தொடங்கி உள்ளோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி இருக்கிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறோம்.

Also Read: இன்று 73வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார் பிரதமர் மோடி!

நமது நாடு தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக உணர்ந்துள்ளது. இதன் காரணமாகவே ‘ஜல் சக்தி’ என்ற தனி அமைச்சகத்தை உருவாக்கினோம். மருத்துவத் துறையை மக்கள் எளிதில் அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2013-14ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டேன்.

Also Read: சுதந்திர தின நாளில் இப்படியொரு கவுரவம்; விங் கமாண்டர் அபிநந்தனுக்கு 'வீர் சக்ரா’ விருது!

அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம் தெரிந்தது. எப்படியாவது நாட்டில் மாற்றம் ஏற்படாதா? என்று ஏங்கிக் கொண்டிருந்தனர். 2019ல் மக்களின் மன உணர்வுகளை பார்த்து வியப்படைகிறேன். அனைவரது ஏமாற்றங்களும் கலைந்துவிட்டன. ஒவ்வொருவரின் கனவுகளும் மெய்ப்பட தொடங்கியுள்ளது. முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய பெண்கள் எந்தளவிற்கு அச்சப்பட்டார்கள் என்று தெரியும்.

Also Read: சுதந்திர தினத்தையொட்டு நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

எனவே தான் அதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையிலும், தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறோம். எனவே ஜல் ஜீவன் மிஷனில் சிறப்பான பங்களிப்பை வருங்காலங்களில் மேற்கொள்வோம். மக்கள் தொகைப் பெருக்கம் நமது நாட்டில் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. அதற்கு உரிய முறையில் தீர்வு காணப்படும்.

21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப, உள்கட்டமைப்பில் ரூ.100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி