ஆப்நகரம்

2 நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் புறப்பட்டார் நரேந்திர மோடி

2 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாளத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, நேபாள பாதுகாப்பு துறை அமைச்சர் வரவேற்றார்.

Samayam Tamil 30 Aug 2018, 10:16 am
2 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாளத்துக்கு சென்றபிரதமர்நரேந்திர மோடியை, நேபாள பாதுகாப்பு துறை அமைச்சர் வரவேற்றார்.
Samayam Tamil 22


வங்காளம், பூட்டான் , இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு வங்க கடலோர நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிம்ஸ்டெக் அமைப்பின் 4வதுமாநாடு நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இன்று தொடங்கி நாளை வரைநடைபெறுகிறது.

இந்த தொழில்நுட்ப வர்த்தக கூட்டமை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்துஇருந்து தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்றார்.

இன்னும் சில நேரத்திற்குள் மாநாடு தொடங்க இருப்பதால், அதில் கலந்து கொள்ள வருகை தந்த மோடி அவர்களை நேபாள பாதுகாப்பு துறை அமைச்சர் வரவேற்றார். மேலும் மோடிக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு , வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து நரேந்திர மோடி பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி