ஆப்நகரம்

தமிழ்நாட்டில் பாஜக நாடகமாடுகிறது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பாஜக நாடகம் நடத்துவதுபோல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை என ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Mar 2018, 4:20 pm
தமிழ்நாட்டில் பாஜக நாடகம் நடத்துவதுபோல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை என ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pm narendra modi is using reddy and kalyan against us cm chandrababu naidu
தமிழ்நாட்டில் பாஜக நாடகமாடுகிறது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு


நடிகர் பவன் கல்யாண் தலைவராக இருக்கும் ‘ஜனசேனா’ கட்சியின் 4 ஆம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பவன் கல்யாண், ‘ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின் ஊழல் பெருகிவிட்டதாகவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும் ஊழல் புரிவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள சந்திரபாபு நாயுடு, “என் மீதும் என் மகன் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வைத்து ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பேசியுள்ளார். அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்து அவர் பேசியதில்லை. டெல்லியில் இருந்து பாஜக எழுதி கொடுத்ததைத்தான் அவர் பேசியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக நாடகம் நடத்துவது போல் ஆந்திராவிலும் நாடகம் நடத்த முயற்சிக்கிறது. ஆனால், அதுபோன்ற நாடகத்தை இங்கு நடத்த முடியவில்லை. பாஜகவிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹார் இடைத்தேர்தல் முடிவுகள் அதற்கு சரியான எடுத்துக்காட்டு” என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி