ஆப்நகரம்

மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், பிரதமா் நரேந்திர மோடி வழங்கிய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டாா்.

Samayam Tamil 25 May 2019, 12:22 am
மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், பிரதமா் மோடி ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினாா்.
Samayam Tamil Ramnath Kovind with Modi


அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தே்ாதலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் தனிக் கட்சியாக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை என்ற நிலையை அடைந்துள்ளது.

இதற்கு ஆடத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தையும், 23 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அமைச்சரவை மற்றும் 16வது மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது மத்திய அமைச்சா்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினா். இந்த கூட்டத்தில் உடல் நலக் குறைவு காரணமாக அருண் ஜெட்ல் பங்கேற்கவில்லை.


அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த நிலையில், பிரதமா் மோடி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் சந்தித்தாா்.

இந்த சந்திப்பின் போது முறைப்படி தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை பிரதமா் மோடி வழங்கினாா். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவா், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

அடுத்த செய்தி