ஆப்நகரம்

ஷி ஜின்பிங் போயாச்சு...நெதர்லாந்து அரசர் வந்தாச்சு; டெல்லியில் உற்சாக வரவேற்பு

டெல்லியில் நடைபெறவிருக்கும் 25ஆவது தொழில்நுட்ப மாநாடு மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக டச்சு அரச குடும்பத்தினர் இந்தியா வந்துள்ளனர்

Samayam Tamil 14 Oct 2019, 1:07 pm
டெல்லி: இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணிக்கு தலைநகர் டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Samayam Tamil Willem Alexander


இந்தியா - சீனா இடையேயான முறைசாரா சந்திப்பில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்பிங் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். கடந்த 11,12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன. சந்திப்பு முடிந்து 12ஆம் தேதி மதியம் ஷி ஜின்பிங் சென்று விட்டார்.

பிரதமர் மோடி - ஷி ஜின்பிங் இருவருக்குள்ளும் நடந்த பேச்சுவார்த்தை என்ன.? விளக்குகிறார் விஜய் கோகலே..

இந்நிலையில், வருகிற 15,16ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கும் 25ஆவது தொழில்நுட்ப மாநாடு மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக டச்சு அரச குடும்பத்தினர் இந்தியா வந்துள்ளனர். அரசராக பதவியேற்றதற்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மேக்ஸிமா ஆகியோருக்கு விமான நிலையத்திலேயே பாரம்பரிய கலை நிகழ்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகை சென்ற டச்சு அரசர் மற்றும் ராணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான பேச்சுவார்த்தையில் அரசர் வில்லியம் அலெக்சாண்டர் கலந்து கொண்டார். இரு தரப்பு உறவுகளை விரிவாக்குவது தொடர்பாக இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்பின்னர், பிரதமர் மோடியை நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் மேக்ஸிமா ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, சர்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என தெரிகிறது.

அடுத்த செய்தி