ஆப்நகரம்

கூடங்குளத்தில் மேலும் பல அணு உலைகள்-பிரதமர் மோடி தகவல்

இந்திய பிரதமர் மோடி,ரஷ்ய அதிபர் புதின்,தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் முண்ணனியில் கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.அப்போது பேசிய பிரதமர்,ரஷ்யாவுடன் இணைந்து மேலும் பல அணு உலைகளை கூடங்குளத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

TNN 10 Aug 2016, 4:22 pm
இந்திய பிரதமர் மோடி,ரஷ்ய அதிபர் புதின்,தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் முண்ணனியில் கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.அப்போது பேசிய பிரதமர்,ரஷ்யாவுடன் இணைந்து மேலும் பல அணு உலைகளை கூடங்குளத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Samayam Tamil pm narendra modi to dedicate kudankulam nuclear power plant to the country
கூடங்குளத்தில் மேலும் பல அணு உலைகள்-பிரதமர் மோடி தகவல்


1000 மெகாவாட் உற்பத்தி திறனை கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்திலுள்ள அணு உலை,முழுக்க ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.இங்கு உள்ள இரண்டு அணு உலைகளில் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து அதிபர் விளாதிமிர் புதின்,தலைநகர் டெல்லியிலிருந்து பிரதமர் மோடி,தமிழக தலைநகர் சென்னையிலிருந்து தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
“தமிழகம் போன்று வேகமாக வளரும் மாநிலங்களுக்கு அணு உலைகள் அவசியம்.உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக கூடங்குளம் அணு உலை இருக்கின்றன.இந்திய-ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு கூடங்குளம் அணு உலை ஒரு நினைவுச்சின்னம்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்துள்ள ரஷ்ய அரசுக்கும்,அந்நாட்டு மக்களுக்கும் எனது நன்றிகள்.”என தமிழக முதல்வர் ஜெயலலிதா,தனது உரையில் தெரிவித்தார்.

அடுத்ததாக பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்,”கூடங்குளம் அணு உலை அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது.தேவையான பாதுகாப்பு வசதிகளும்,உள்கட்டமைப்பு வசதிகளும் கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ளன.”என பேசினார்.

”கூடங்குளம் அணு உலையை புடினுடன் இணைந்து நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.இந்திய-ரஷ்ய உறவின் மற்றொரு மைல்கல் கூடங்குளம் அணு உலையாகும்.இந்திய,ரஷ்ய பொறியியலாளர்களின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இந்த விழாவை பார்க்க வேண்டும். மரபுசாரா எரிபொருள் தயாரிப்பிற்காக இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் முக்கியமான முடிவு இது.இந்தியாவும்,ரஷ்யாவும் இணைந்து இன்னும் பல அணுமின் உலைகளை கூடங்குளத்தில் செயல்படுத்தும் திட்டமும் உள்ளது.”என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.தனது உரையின் போது ரஷ்ய மொழியிலும்,தமிழ் மொழியிலும் பேசி பிரதமர் மோடி அசத்தினார்.

அதன் பின்னர் காணொளிக்காட்சி மூலமாக கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் தங்கமணி,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

கூடங்குளம் முதல் அணு உலையின் மூலம் தற்போது வரை 1,070 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது அணு உலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.முதல் அணு உலை மூலம் இதுவரை 562.50 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி