ஆப்நகரம்

நெருங்கும் தேர்தல்: சூறாவளி பிரச்சாரத்துக்கு ரெடியான மோடி

பிகார் சட்டமன்ற தேர்தலையொட்டி 12 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Oct 2020, 8:08 pm

பிகாரில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பிகாரில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் 12 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Narendra Modi


இதுகுறித்து பிகார் பாஜக மேலிட பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிகாரில் 12 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பார். அவருடன் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் இணைந்துகொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 23ஆம் தேதியன்று சசராம், கயா, பகல்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் நரேந்திர மோடி பங்கேற்பார். அக்டோபர் 28ஆம் தேதியன்று தர்பங்கா, முசாபர்பூர், தலைநகர் பாட்னா ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்பார்.

நவம்பர் 3ஆம் தேதியன்று சப்ரா, கிழக்கு சம்பரான், சமஸ்திபூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி கலந்துகொள்வார் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

சரக்கு அடிசுட்டே மசாஜ் செய்யலாம்: வருகிறது புதிய சொகுசு ரயில்!

தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 121 தொகுதிகளிலும், நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் 122 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஜனதா தளம் தனது 122 தொகுதி பங்கில் இருந்து ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு சில தொகுதிகளை கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடப்போவதில்லை என்று லோக் ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது. எனினும், ஜனசக்தி தளம் போட்டியிடும் தொகுதிகளில் லோக் ஜனசக்தி போட்டியிட இருக்கிறது.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அடுத்த செய்தி