ஆப்நகரம்

நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மோடி- அந்த சஸ்பென்ஸ் விஷயம் இதுதான்!

ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள அதிரடியான நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடி நாளை உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Aug 2019, 8:46 am
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா, மாநிலங்களவையில் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
Samayam Tamil Modi New


இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்து உரையாற்றினார்.

Also Read: காஷ்மீர், லடாக் விவகாரத்துக்கு பாகிஸ்தானின் நிலைபாடு என்ன?

அப்போது பேசிய அவர், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் அரசாணைக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியதையும் குறிப்பிட்டார். இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது.

இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேசமயம் சிவசேனா, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

Also Read: இனி காஷ்மீரில் பழங்குடியினத்தவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகை- நிதி அமைச்சர் அறிவிப்பு

இந்த சூழலில் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பிக்கள் ஒருவர், நேற்று மாநிலங்களவையில் அரசியலமைப்பு சாசனத்தை கிழித்தனர். இதனால் அவர்கள் இருவரையும் வெளியேற்ற அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இதையடுத்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மீது வாக்கெடுப்பில், ஆதரவாக 125 வாக்குகள் கிடைத்தன. எதிராக 61 வாக்குகள் விழுந்தன.

Also Read: இரண்டாக உடைந்த ஜம்மு காஷ்மீர் - புதிதாக இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம்!

இதனால் இந்த மசோதா நிறைவேறியது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி