ஆப்நகரம்

இன்று மாலை 4 மணிக்கு அடுத்த பரபரப்பு- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய உரை!

பிரதமர் மோடி இன்று மாலை அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2019, 11:47 am
வழக்கமாக மனதின் குரல் என்று பொருள்படும் மன்-கி-பாத் நிகழ்ச்சியில் மாதந்தோறும் பிரதமர் மோடி வானொலியில் பேசி வருகிறார். இதில் பல்வேறு விதமான கருத்துகளை எடுத்துரைப்பார்.
Samayam Tamil Modi


இந்த சூழலில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

Also Read: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நாடு திரும்புமாறு பாகிஸ்தான் உத்தரவு

இதனால் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்தது.

Also Read: முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!

மேலும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் சலுகை ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். வரலாற்றில் இல்லாத அளவு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Also Read: காஷ்மீர் மாணவர்கள் மீது 'தனி கவனம்' இருக்கட்டும்: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

எனவே ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கக்கூடும். அவர்கள் பயத்தைப் போக்கும் வகையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி