ஆப்நகரம்

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

Samayam Tamil 12 May 2020, 12:35 pm
Samayam Tamil modi - before podium
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றி அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனைத் தொடர்ந்து ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து அறிவித்தார். அந்த அறிவிப்புக்கும் மீண்டும் ஒருமுறை காணொலி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டபோது காணொலி வழியாகப் பிரதமர் தோன்றவில்லை. நேரடியாக மத்திய உள்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மே 17ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவுக்கு வரவிருக்கும் சூழலில், இன்று மீண்டும் இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்ற உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் வெளிப்டையாகத் தெரியாத நிலையில், தளர்வு விதிகள் குறித்த அறிவுரைகளையும், கொரோனா போர்வீரர்களுக்கு பாராட்டுகளையும் இன்றைய உரையில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி