இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிக தடையாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதசே மாநிலம் பாக்பத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பாஜகவின் ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் கை கோர்த்து உள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஒரு குடும்பத்தை தொழுது கொண்டிருப்பவர்கள் நாட்டை கவனிக்க முடியாது. எனவே, காங்கிரசால் நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாது.
மற்ற உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்து பாராட்டி வருகின்றனர். ஆனால், எதிர்கட்சிகளோ தூற்றி வருகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிர்ாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் கூட எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை காங்கிரஸ் கட்சி கேலி செய்து வருகிறது. பெண்களுக்காக கழிப்பறை கட்டி கொடுப்பதையும் நகைச்சுவையாக நினைக்கிறார்கள். அவர்களின் பார்வையில், தூய்மை இந்தியா திட்டமும் கேலிக்குரியது, ஏழை மக்களுக்கான இலவச எரிவாயு சிலிண்டர் திட்டமும் கேலிக்குரியது, அனைத்து நல்ல திட்டங்களும் கேலிக்குரியது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக 30 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா மூலம் நாட்டில் 120 புதிய மொபைல் கம்பெனி நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முந்தைய அரசில் வெறும் இரண்டே இரண்டு மொபைல் கம்பெனிகள் மட்டும் தான் இருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதசே மாநிலம் பாக்பத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பாஜகவின் ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் கை கோர்த்து உள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஒரு குடும்பத்தை தொழுது கொண்டிருப்பவர்கள் நாட்டை கவனிக்க முடியாது. எனவே, காங்கிரசால் நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாது.
மற்ற உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்து பாராட்டி வருகின்றனர். ஆனால், எதிர்கட்சிகளோ தூற்றி வருகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிர்ாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் கூட எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை காங்கிரஸ் கட்சி கேலி செய்து வருகிறது. பெண்களுக்காக கழிப்பறை கட்டி கொடுப்பதையும் நகைச்சுவையாக நினைக்கிறார்கள். அவர்களின் பார்வையில், தூய்மை இந்தியா திட்டமும் கேலிக்குரியது, ஏழை மக்களுக்கான இலவச எரிவாயு சிலிண்டர் திட்டமும் கேலிக்குரியது, அனைத்து நல்ல திட்டங்களும் கேலிக்குரியது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக 30 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா மூலம் நாட்டில் 120 புதிய மொபைல் கம்பெனி நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முந்தைய அரசில் வெறும் இரண்டே இரண்டு மொபைல் கம்பெனிகள் மட்டும் தான் இருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.