ஆப்நகரம்

நிரவ் மோடிக்கு மும்பை நீதிமன்றம் பொது நோட்டீஸ்

வங்கி கடன் மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மும்பை நீதிமன்றம் பொது நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 12 Aug 2018, 3:21 am
வங்கி கடன் மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மும்பை நீதிமன்றம் பொது நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil nirav modi-kQBI--621x414@LiveMint


மும்பையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடியில் செய்த வைர வியாபாரி நிரவ் மோடி. தற்போது வெளிநாட்டுச் சென்று தலைமறைவாக உள்ள அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நிரவ் மோடி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை மும்பையில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகின்றன. இந்த வழக்குகள் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு பல முறை சம்மன் அனுப்பியும் நிரவ் மோடி ஆஜராகவில்லை.

இந்நிலையில், ‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018’-ன் கீழ், நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பர்வி மோடி, சகோதரர் நீஷல் மோடி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 3 பேருக்கும் மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆஷ்மி தனித்தனியாக பொது நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்.

‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018’ வங்கிக்கடன் பெற்று மோசடி செய்யும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் சமீபத்தில்இயற்றப்பட்டது நினைவூட்டத்தக்கது.

அடுத்த செய்தி