ஆப்நகரம்

துபாயில் நிரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.56 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

துபாயில் நிரவ் மோடியின் 56 கோடி ரூபாய் மதிப்பலான சொத்துக்கள் முடக்கப்பட்டன

Samayam Tamil 7 Nov 2018, 7:07 am
வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ் மோடியின் துபாயில் உள்ள 56 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
Samayam Tamil nirav-modi-1-644x362


பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு தெரியாமல், அங்குள்ள வங்கி அதிகாரிகளின் உதவியோடு முறைகேடாக பணம் அனுப்பியதில், வங்கிக்கு 12,700 கோடி ரூபாய் நிரவ் மோடி மோசடி செய்து விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர்களை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சர்வதேச போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள், கீதாஞ்சலி நிறுவனத்தின் இயக்குனர் அனியாத் சிவ் ராமன் நாயர் உட்பட நிரவ் மோடியின் நிறுவனத்தினர் பலர் கைதாகி உள்ளனர்.

மேலும்,மும்பையில் வோர்லி கடற்கரைப்பகுதயில் உள்ள நிரவ் மோடியின் வீட்டில் இருந்து, 26 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், கைக்கடிகாரம், ஓவியங்களை அமலாக்கதுறையினர் பறிமுதல் செய்தனர். இதே போல், லண்டனில் உள் பார்க்லே வங்கியில்நிரவ் லிமிடேட் என்ற பெயரில் உள்ள நிரவ் மோடியின் ரகசிய வங்கிக் கணக்கில் 9 கோடி ரூபாய்க்கு மேல் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டிருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதனிடையே நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு கைது செய்து இந்தியா அனுப்புமாறு ஹாங்காங்க் நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறை முழுவீச்சில் உள்ளது.

இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நிரவ் மோடிக்குச் சொந்தமான 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நிர்வ் மோடியின் அப்பாட்மென்ட்கள், நகைகள், நியூயார்க்- இங்கிலாந்தில் உள்ள வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவைகள் இதில் அடங்கியுள்ளது. இந்நிலையில், துபாயில் நிரவ் மோடிக்குச் சொந்தமான 46 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி