ஆப்நகரம்

நிரவ் மோடிக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல்!

பஞ்சாப் வங்கி மோசடி தொடர்பாக தொழிலதிபர் நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 24 Feb 2018, 4:30 pm
பஞ்சாப் வங்கி மோசடி தொடர்பாக தொழிலதிபர் நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil pnb fraud ed attaches pricey houses land worth rs 523 crore of nirav modi group
நிரவ் மோடிக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல்!


பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்தது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைரநகை வியாபாரியும், கோடீஸ்வரரும் ஆன நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஆனால், நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதால், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.



இதில், சி.பி.ஐ., அமலாக்க பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர். நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இந்த ‘மெகா மோசடி’ தொடர்பாக நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

முடக்கப்பட்ட சொத்துகளில் 6 குடியிருப்புகள் மற்றும் அலுவலக கட்டடங்கள் மும்பையிலும், 2 பிளாட்கள் புனே நகரிலும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி அலகு, அலிபாக் பகுதியில் ஒரு பண்ணை வீடு மற்றும் அகமதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட கர்ஜத் பகுதியில் 135 ஏக்கர் நிலம் உள்பட 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை இன்று பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்

அடுத்த செய்தி