ஆப்நகரம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி; நிரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துக்கள் முடக்கம்!

நிரவ் மோடியின் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 21 May 2018, 8:21 pm
மும்பை: நிரவ் மோடியின் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Nirav Modi


மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் தனது உறவினர் மெஹூல் சோக்சி உடன் சேர்ந்து கொண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 13,400 கோடி மோசடி செய்துள்ளார்.

பின்னர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். மேலும் அவரது தந்தை தீபக் மோடி, சகோதரர் நிஷால் மோடி, சகோதரி பூர்வி மேத்தா, அவரது கணவர் மாயங்க் மேத்தா ஆகியோரும் வெளிநாடு தப்பினர்.

கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில் மும்பையில் உள்ள ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.

PNB fraud ED attaches Rs 170-crore assets of Nirav Modi.

அடுத்த செய்தி