ஆப்நகரம்

திருப்பதி மலையில் புதையல்: அடேயப்பா ஒரு வருஷமா போட்ட திட்டம்!

திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதற்காக சுரங்கப் பாதை அமைத்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 18 May 2021, 8:35 am
புதையலைத் தேடி சாகசக் கதைகளில் பயணிக்கும் கதாநாயகன் போல் நிஜ வாழ்க்கையில் இன்றும்கூட புறப்பட்டுச் செல்கிறார்கள். காவல்துறை வசம் சிக்கி கம்பி எண்ணுகிறார்கள். திருப்பதியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil police have arrested some people who had set up a tunnel to collect treasure on tirupati seshachalam hill
திருப்பதி மலையில் புதையல்: அடேயப்பா ஒரு வருஷமா போட்ட திட்டம்!


சாமியார் கொடுத்த யோசனை!

ஆந்திர மாநிலம் திருப்பதி எம்ஆர் பள்ளியைச் சேர்ந்தவர் மக்கு நாயுடு. இவர் அப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கூலியாட்களை வைத்து கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலை சேஷாசல மலைத்தொடரில் புதையல் இருப்பதாக நெல்லூரை சேர்ந்த ராமையா என்கிற சாமியார் மக்கு நாயுடுவுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த மலையில் 120 அடி தூரம் சுரங்கப்பாதை தோண்டினால், இரண்டு அறைகளில் வைரம், வைடூரியங்கள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய மக்கு நாயுடு அந்த புதையலை எடுக்க முடிவு செய்தார்.

வெளியூரிலிருந்து ஆள் வைத்து தோண்டிய மக்குநாயுடு

சுரங்கம் தோண்ட உள்ளூர் கூலி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அனைவருக்கும் தெரிந்து விடும் என்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த கூலி ஆட்களை வைத்து சுரங்கப்பாதை தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளார். அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை ஆள்களை மாற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இவவாறு கடந்த ஓராண்டாக தோண்டி வந்துள்ளார்.

பாறையை உடைக்க போட்ட திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்: இனி ஈஸியா தரிசிக்கலாம்!

மக்குநாயுடுவும் அவரது ஆள்களும் சுமார் 80 அடி தோண்டியபோது பெரிய பாறை ஒன்று இடையூறாக வந்ததால் அதை அகற்றுவதற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திறமை வாய்ந்த 5 கூலியாட்களை அழைத்து வந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேஷாசல மலைக்கு அவர்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் மக்குநாயுடு.

சுற்றி வளைத்த போலீஸ்

இதை பார்த்த பொதுமக்கள் திருமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மக்குநாயுடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 5 பேரை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, 80 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

யாருக்கெல்லாம் தொடர்பு?

சசிகலா வச்ச குறி இந்த தடவை தப்பாது: யாருக்காக ரீ என்ட்ரி கொடுக்கிறார் தெரியுமா?

திருப்பதி சேஷாசலம் மலை என்பது கடுமையான பாதுகாப்புக்குள்ளான பகுதி. வனத்துறை, தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் காவல்துறையினர் என மூன்று துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களையும் கடந்து எவ்வாறு ஓராண்டாக செயல்பட்டு 80 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இதனால் கைது செய்யப்படவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி