ஆப்நகரம்

இனி ஆபாச படம் பார்த்தால் போலீஸ் புடிக்கும்.. அதிரடி அறிவிப்பு!

ஆபாச படங்கள் குறித்து இண்டர்நெட்டில் தேடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Feb 2021, 11:44 pm
ஆபாச படங்களை பார்ப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஆபாச படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ, கூகுளில் ஆபாச படங்களை பற்றி தேடினால் கூட அவர்கள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ளும்படி காவல்துறைக்கு உ.பி அரசு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil Representational image


இதன்படி, யாரேனும் ஒருவர் இண்டர்நெட்டில் ஆபாச படங்கள் குறித்து தேடினால் உ.பி மகளிர் உதவி எண் 1090க்கு தகவல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படும்.

100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை.. இனி தாங்க முடியாது குருநாதா!
இதன்பின்னர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இத்திட்டம் ஏற்கெனவே ஆறு மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 1090 உதவி எண் பெரும் உதவியாக இருக்குமென போலீஸ் ஏடிஜிபி நீரா ராவத் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கம்.. ஷாக் தகவல்!
பொதுமக்கள் இண்டர்நெட்டில் என்ன தேடுகின்றனர், ஆபாச படங்கள் குறித்து தேடுகின்றனரா என்பதை கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாராவது ஆபாச படங்கள் குறித்து தேடினால் உடனடியாக தகவல் கிடைத்துவிடும் என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி