ஆப்நகரம்

18 கோடி ரூபாய் ஊழல் பாஜக முன்னாள் அமைச்சர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

, பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Samayam Tamil 8 Nov 2018, 6:00 am
அமலாக்கத்துறையின் பிடியில் இருந்து தப்பிக்க உதவுதாக கூறி பல கோடி ரூபாய் பேரம் பேசிய குற்றச்சாட்டில், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Samayam Tamil janardhan


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆம்பிடென்ட் என்ற தனியார் நிதிநிறுவனம், கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியது. இது குறித்து அமலாக்கத்துறையினர் ஆம்பிடென்ட் நிறுவன உரிமையாளர் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும் முடக்கியது.

அப்போது பாஜக அமைச்சராக இருந்த ஜனார்த்தன் அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து பரீத்தை காப்பாற்றுவதற்காக உறுதியளித்தார். மேலும், இடைத்தரகர் அலிகார் மூலம் 57 கிலோ தங்கத்தை பரீத்திடம் முதற்கட்டமாக இருந்து ஜனார்த்தன் பெற்றார். இதன் மதிப்பு சுமார் 18 கோடி ரூபாயாகும்.இதையடுத்து இடைத்தரகர் அலிகாரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஜனார்த்தனை தேடி வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு 500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது ஜனார்த்தன், தனது மகளுக்கு 500 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்தார். இவர் ஏற்கனவே, இரும்புத்தாது ஏற்றுமதி, சுரங்கத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்