ஆப்நகரம்

ஒரு மாசமாச்சு; நீதிபதி கர்ணன் எங்கதான்பா போனாரு; தேடித் தேடி டயர்டான போலீசார்...!

ஒரு மாதமாகியும் நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

TNN 11 Jun 2017, 1:45 am
சென்னை: ஒரு மாதமாகியும் நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
Samayam Tamil police searches justice karnan for last one month
ஒரு மாசமாச்சு; நீதிபதி கர்ணன் எங்கதான்பா போனாரு; தேடித் தேடி டயர்டான போலீசார்...!


கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை நீதிபதி கர்ணன் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்து, நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆஜராகாததால், நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதற்கிடையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன் முன்பு, ஆஜராக கர்ணன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கர்ணனை கைது செய்ய, கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர்.

ஆனால் அவர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஒரு மாதமாகியும் இதுவரை அவரை கண்டுபிடிக்க போலீசாரால் முடியவில்லை. இன்றுடன் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Police searches Justice Karnan for last one month.

அடுத்த செய்தி