ஆப்நகரம்

கர்நாடக தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு; அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

கர்நாடக தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து, அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவதைக் காணலாம்.

Samayam Tamil 12 May 2018, 7:26 pm
பெங்களூரு: கர்நாடக தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து, அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவதைக் காணலாம்.
Samayam Tamil Karnataka Elections
கர்நாடக தேர்தல்


கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதன் வாக்குகள் வரும் 15ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஜனதா தள் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் மைசூரு மாவட்டத்தில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, பெரும்பான்மை தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

பாஜக தலைவர் எடியூரப்பா கூறுகையில், 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாங்கள் ஆட்சி அமைப்போம். காங்கிரஸிற்கு மக்கள் பாடம் கற்றுத் தருவார்கள் என்றார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, எங்கள் கட்சி தனித்து அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஹெச்.டி.தேவகவுடா பேசுகையில், கர்நாடகாவில் ஆட்சியமைக்க வாய்ப்பை பெறுவோம் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் திறம்பட செயல்பட்டிருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். பாஜக 60-70 தொகுதிகளுக்கு மேல் பெறாது. அவர்கள் ஆட்சி அமைப்பது குறித்து கனவு கண்டு கொண்டிருக்கின்றனர் என்றார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும். அதன்பிறகு தமிழக நலன்கள் குறித்து, நேரில் சென்று பேசுவேன் என்று கூறினார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், 130 தொகுதிகளுக்கும் அதிகமாக பெற்று, பாஜக ஆட்சி அமைக்கும். கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

Political Leaders says about Karnataka Assembly Election Results.

அடுத்த செய்தி