ஆப்நகரம்

கடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% தள்ளுபடி – நாராயணசாமி

புதுச்சோியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையில், கடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 2 Jul 2018, 12:36 pm
புதுச்சோியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையில், கடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.
Samayam Tamil _PUDUCHERRY_BUDGET_2016[1].


புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் மாநில முதல்வா் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினாா். மொத்தமாக ரூ.7 ஆயித்து 530 கோடிக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு எதிா்ப்பு தொிவித்து முன்னாள் முதல்வா் ரங்கசாமி தலைமையில் என்.ஆா்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா்கள் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய இந்த அரசுக்கு எந்த தாா்மீக உரிமையும் இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனா்.

இதே போன்று சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்த அ.தி.மு.க. உறுப்பினா்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. எனவே தற்போது நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தால் எந்த பயனும் இருக்காது என்று அவையை விட்டு வெளிநடப்பு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து முதல்வா் நாராயணசாமி நிதி நிலை அறிக்கையை வாசித்தாா். அப்போது கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற விவசாயிகள் முறையாக கடனை செலுத்தும் போது அரசு 4% தள்ளுபடி செய்யும் என்று அறிவித்தாா். தொடா்ந்து அவா் பேசுகையில், புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அறைகள், டிஜிட்டல் கல்வி அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும், அட்சயபாத்திரம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி