ஆப்நகரம்

அதிகாரத்தை இப்படிலாமா பயன்படுத்துறது; சிக்கிய புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர்!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்காக, பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 26 Oct 2017, 4:53 pm
புதுச்சேரி: அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்காக, பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pondicherry university vc ex registrar and two others booked
அதிகாரத்தை இப்படிலாமா பயன்படுத்துறது; சிக்கிய புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர்!


புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் துணைவேந்தர் பதவியில் இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்தி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பணி நியமனம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சந்திராவை கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இதையடுத்து கடந்த ஆண்டு, அவரை பதவியில் இருந்து நீக்கியது. இதனைத் தொடர்ந்து துணைவேந்தராக(பொறுப்பு) அனிஷா பஷீர் நியமிக்கப்பட்டார். அவர் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி, வேண்டியவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற உதவி பதிவாளர் பாலசுப்பிரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து துணைவேந்தர் (பொறுப்பு) அனிஷா பஷீர் கான் மற்றும் ஊழியர்கள் வீரப்பன், ராமச்சந்திரன், ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் மீது 420 (மோசடி), 468 (மோசடி எண்ணத்தில் செயல்படுதல்) 471 (போலி ஆவணங்கள் தயாரித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pondicherry University VC, ex-registrar and two others booked for forgery, tampering with records.

அடுத்த செய்தி