ஆப்நகரம்

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல்: புதுவையில் நாளை முழு அடைப்பு

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து, புதுவையில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TNN 15 Sep 2016, 4:20 am
புதுச்சேரி: கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து, புதுவையில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pondy bandh due to tamilians are attacked in cauvery issue
கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல்: புதுவையில் நாளை முழு அடைப்பு


புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அதில் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதனைக் கண்டித்து, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து புதுச்சேரி அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும், இதற்கு 31 அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த முழு அடைப்புக்கு வணிகர்கள், பஸ், ஆட்டோ, லாரி, திரையரங்கு, தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி