ஆப்நகரம்

சுஷ்மாவுக்கு புதுவை முதல்வர் கடிதம்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட புதுச்சேரி மீனவர்கள் 4 பேரையும், அவர்களுடைய படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர் நாராயணசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TNN 17 Aug 2016, 1:43 am
புதுதில்லி: இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட புதுச்சேரி மீனவர்கள் 4 பேரையும், அவர்களுடைய படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர் நாராயணசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil pondy cm narayanasamy writes letter to sushma
சுஷ்மாவுக்கு புதுவை முதல்வர் கடிதம்


புதுவை காரைக்கால் மாவட்டம் டி.ஆர். பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, ரஹ்மான்கான், மொஹமத் கான் ஆகிய 4 பேரும் ராமேஸ்வரம் கடற் பகுதியில் கடந்த வாரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள புதுச்சேரி மீனவர்கள் 4 பேரையும், அவர்களுடைய படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர் நாராயணசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி