ஆப்நகரம்

இந்தியாவில் 153 மாவட்டங்களில் கடும் வறட்சி: இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 16 Apr 2018, 3:40 pm
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil water-conservation
இந்தியாவில் 153 மாவட்டங்களில் கடும் வறட்சி: இந்திய வானிலை மையம் அறிவிப்பு!


இந்திய வானிலை மையம் நாடு முழுவதும் உள்ள 588மாவட்டங்களில் மழைப்பொழிவின் அளவுக் குறித்து ஆய்வு செய்தது. அதில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்த 404 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 109 மாவட்டங்களில் லேசான வறட்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 153 மாவட்டங்கள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த குளிர்காலத்தில் மழைப்பொழிவு குறைந்ததே இந்த வறட்சிக்குக் காரணம் என்று அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடும் வறட்சியுள்ள மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர மதுரை, சிவகங்கை, திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில்வறட்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையத்தின் வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி