ஆப்நகரம்

லாலு பிரசாத் யாதவ் பினாமி வீட்டில் ஐடி ரெய்டு: ராஷ்ட்ரீய ஜனதா தளம்- பாஜக தொண்டர்களிடையே மோதல்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது வருமான வரித்துறை பிடியை இறுக்கியுள்ள நிலையில், அக்கட்சியினருக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

TNN 18 May 2017, 10:37 am
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது வருமான வரித்துறை பிடியை இறுக்கியுள்ள நிலையில், அக்கட்சியினருக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil post raids on lalu prasad rjd bjp workers clash in patna
லாலு பிரசாத் யாதவ் பினாமி வீட்டில் ஐடி ரெய்டு: ராஷ்ட்ரீய ஜனதா தளம்- பாஜக தொண்டர்களிடையே மோதல்


பாஜக.,வுக்கு எதிராக மிகப்பெரிய அரசியல் கூட்டணி ஏற்படுத்தி, வரும் மக்களவைத் தேர்தலில் அக்கட்சியை தோற்கடிப்பேன் என்று, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அரசியல் கூட்டணி ஏற்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கியுள்ளார். இந்நிலையில், திடீரென அவரின் பினாமி எனக் கூறப்படும் சிலரது வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், முறைகேடான வகையில் லாலு பிரசாத், நில பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாட்னா நகரில் பாஜக சார்பாக, லாலு பிரசாத் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை கண்டித்துப் போராட்டம் நடத்த, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் புறப்பட்டுச் செல்லவிருந்த நிலையில், அவர்களை பாஜக அலுவலகம் முன்பாக திரண்டு வந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் வழிமறித்தனர்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் கையில் கிடைத்த ஆயுதங்களை வைத்து, சராமரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பலருக்கு, மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது.

இதேபோன்று, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக.,வினரும் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பீர்சந்த் படேல் பாத் மற்றும் கர்தானிபாக் ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படவே, போலீசார் விரைந்து வந்த சமரசம் செய்தனர்.

காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி பாஜக.,வின் பீகார் தலைவர் சுஷில் குமார் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘’லாலு பிரசாத் யாதவை பாதுகாப்பதற்காக, திட்டமிட்டே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்,’’ என்றார்.

The stand-off between the RJD and BJP spilled on to the streets in Patna.

அடுத்த செய்தி