ஆப்நகரம்

சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு

பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் அரவிந்த் சாவந்தின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது

Samayam Tamil 12 Nov 2019, 1:07 pm
டெல்லி: சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவர் வகித்து வந்த துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்


மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தாலும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது, ஐம்பதுக்கு-ஐம்பது என அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலால் அக்கூட்டணி முறிந்தது.

முன்னதாக, அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். எனினும், போதுமான பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்துள்ளது.

நாளை வரைக்கும் தான் 'டைம்'... மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அவகாசம்!!

இதையடுத்து, 2ஆவது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பமா எனக் கேட்டு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், சிவசேனாவுக்கும் ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லாததால் அக்கட்சிக்கு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு தேவை என்பதால் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சபாஷ்...பாஜகவுக்கு தண்ணிக் காட்டிய சிவசேனா...சிவசேனாவுக்கு 'செக்' வைத்துள்ள காங்கிரஸ் !!

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் போது, சிவசேனா அங்கம் வகிட்து வரும் மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் மட்டுமே பேச்சுவர்த்தை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் தான் பொறுப்பு வகித்த கனரகத் தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பதவியை ராஜினிமா செய்தார்.

சிவசேனா - பாஜக கூட்டணி முறிந்தது!

அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் அரவிந்த் சாவந்தின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அரவிந்த் சாவந்த் வகித்து வந்த கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவரிடம் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அகிய துறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி