ஆப்நகரம்

EIA2020: இது வரைவுதான்... மாற்றங்கள் செய்யப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

இது வெறும் வரைவுதான். இறுதி அறிக்கை அல்ல. வெறும் வரைவை எதிர்த்து எப்படிப் போராட்டம் நடத்துகிறார்கள்.

Samayam Tamil 10 Aug 2020, 10:00 pm
நாடு முழுக்க சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 வெளியானதிலிருந்து போராட்டக் குரல்கள் வலுத்து வருகின்றன. தாக்க மதிப்பீடு உருவாக்கப்பட்டதன் நோக்கமான சூழலியல் பாதுகாப்பு என்ற அடிப்படையையே மாற்றி, தொழிலை முதன்மைப்படுத்தி இருக்கிறது இந்த 2020 வரைவு என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Samayam Tamil prakash javdekar


இதன் மீது மக்கள் கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 11ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ந்நிலையில் கால அவகாசத்தை நீட்டிக்கவும்,வரைவைத் தடை செய்யவும் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “இது வெறும் வரைவுதான். இறுதி அறிக்கை அல்ல. வெறும் வரைவை எதிர்த்து எப்படிப் போராட்டம் நடத்துகிறார்கள். மக்கள் கருத்துக்காக இந்த வரைவு வைக்கப்பட்டிருக்கிறது. அனைவரது கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு மாற்றங்கள் இடம்பெறும்.

EIA 2020: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

விதிமுறைகளின்படி, பொதுமக்கள் கருத்துக்காக 60 நாட்கள் கால அவகாசம் கொடுத்தால் போதுமானது. ஆனால், இதற்கு கூடுதலாகவே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வெறும் வரைவைக் காரணம் காட்டி குதிக்கிறார்கள். “ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி