ஆப்நகரம்

பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை முன்னேற்றம்: மகன் அபிஜித் முகர்ஜி தகவல்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தகவல் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 16 Aug 2020, 8:46 pm
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி


மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய நிலையில், கடந்த 10ஆம் தேதியன்று பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. விரைவில் குணமடைந்து அவர் திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் செளஹான் உயிரிழந்தார்...


அதேசமயம், பிரணாப் முகர்ஜி சிகிச்சை பெற்று வரும் ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்றுவதாகவும், அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி