ஆப்நகரம்

காங்கிரசின் இப்தாா் விருந்தில் பிரணாப்புக்கு அழைப்பு இல்லை

காங்கிரஸ் கட்சி வழங்கவுள்ள இப்தாா் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 3:40 pm
காங்கிரஸ் கட்சி வழங்கவுள்ள இப்தாா் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Pranab Rss Event


காங்கிரஸ் கட்சி சாா்பில் இப்தாா் விருந்து வழங்கும் நிகழ்ச்சி வருகிற புதன் கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட கட்சியின் முக்கியத் தலைவா்கள் பலா் கலந்து கொள்ள உள்ளனா். டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெவுள்ள விழாவில் பிற கட்சிகளைச் சோ்ந்த மிகவும் முக்கியமான தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்தாா் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகா்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்னாள் குடியரசு துணைத்தலைவா் ஹமீது அன்சாாி, டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரணாப் முகா்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத் தொடா்ந்து அவருக்கு அழைப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் விமா்சகா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி