ஆப்நகரம்

அப்துல்கலாம் இடத்தைப் பிடிக்க ஆசைப்பட்ட பிரணாப் முகர்ஜி!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வசித்த அரசு வீட்டில் பிரணாப் முகர்ஜி குடியேற உள்ளார்.

TNN 24 Jul 2017, 2:09 am
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வசித்த அரசு வீட்டில் பிரணாப் முகர்ஜி குடியேற உள்ளார்.
Samayam Tamil pranab mukherjees new residence which previously hosted kalam
அப்துல்கலாம் இடத்தைப் பிடிக்க ஆசைப்பட்ட பிரணாப் முகர்ஜி!


தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25ஆம் தேதியுடன் முடிகிறது. அவருக்குப் பின் ராம்நாத் கோவிந்த் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்க இருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அவரது ஆயுட்காலம் வரை அவர் விரும்பும் இடத்தில் வீடு வழங்க வேண்டும். அந்த வீட்டிற்கு வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும்.

இதன்படி, ஓய்வுபெறும் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் டெல்லி ராஜாஜி சாலையில் பங்களாவில் நாளை குடியேறுகிறார். இந்த பங்களா முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இறுதிக்காலம் வரை வசித்த வீடு ஆகும். இவரது மறைவுக்குப் பிறகு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு இந்த பங்களா வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாவில் பிரணாப் குடியேற இருப்பதால், கட்டிடம் முழுவதும் வண்ணம் பூசவது, தோட்டத்தை சீரமைப்பது உள்ளிட்ட வேலைகள் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி