ஆப்நகரம்

சொந்த நாடு திரும்புவதற்கு, இந்தியாவிலேயே இறந்துவிடுகிறோம்; கண்ணீருடன் ரோஹிங்கியா அகதிகள்...!

சொந்த நாடு திரும்புவதற்கு, இந்தியாவிலேயே இறந்துவிடுவதாக ரோஹிங்கியா அகதிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

TNN 24 Aug 2017, 2:34 pm
டெல்லி: சொந்த நாடு திரும்புவதற்கு, இந்தியாவிலேயே இறந்துவிடுவதாக ரோஹிங்கியா அகதிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
Samayam Tamil prefer to die here than go back say rohingyas
சொந்த நாடு திரும்புவதற்கு, இந்தியாவிலேயே இறந்துவிடுகிறோம்; கண்ணீருடன் ரோஹிங்கியா அகதிகள்...!


இந்தியாவில் பதிவுச் செய்யப்படாமல் வசித்து வருகின்ற 40,000க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தாங்கள் மியான்மருக்கு சென்று வன்முறையில் சிக்குவதைவிட, இந்தியாவிலேயே இறந்து விட தயாராக இருப்பதாக ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் தெரிவித்துள்ளனர். முகமது யூசப்(35) எனும் ரோஹிங்கியா அகதி கூறுகையில், “நாங்கள் இந்தியாவில் நிரந்தரமாக தங்க வரவில்லை. நீதி வேண்டியே இங்கு வந்துள்ளோம்.

நாங்கள் மியான்மருக்குச் சென்றால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவோம்” எனத் தெரிவித்தார். இவர் பத்தாயிரம் ரோஹிங்கியா அகதிகளை கொண்டுள்ள ஜம்மு அகதி முகாமில் வசித்து வருகிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், “இந்த அகதிகளை ஜம்மு காஷ்மீருக்கு கொண்டு வந்தது யார்? காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக் காலத்தில் தான் இவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டார்கள்.

இந்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை குடியமர்த்தி, தங்களது வாக்கு வங்கி உயர்த்திக் கொள்ள நினைத்தார்கள்” எனக் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லீம்களை கண்டறிந்து நாடு கடத்த மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

'Prefer To Die Here Than Go Back', Say Rohingyas, Facing Deportation.

அடுத்த செய்தி