ஆப்நகரம்

'வீரர்களின் தியாகத்தை தேசம் என்றும் நினைவில் கொள்ளும்' - குடியரசு தலைவர்

சத்தீஸ்கர் தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 4 Apr 2021, 6:57 pm
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் ராணுவ வீர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 22 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 31 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் 23 பேர் பிஜாப்பூர் மருத்துவமனையிலும் 7 பேர் ராய்ப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil chhattisgarh attack


இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது, தேசம் என்றும் நினைவில் கொள்ளும் என கூறியுள்ளார். அவரை தொடர்ந்து, வீரர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துளள்னர்.

பதறவைத்த மாவோயிஸ்ட் தாக்குதல்; ஜவான்கள் பலரைக் காணாததால் அதிர்ச்சி!

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து தமது ட்விட்டரில் பதிவில் கூறியுள்ளதாவது, ''சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றத்தின் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும்'' என இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

அடுத்த செய்தி