ஆப்நகரம்

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ராம்நாத் கோவிந்த்!

இமாச்சலபிரதேச பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார்.

Samayam Tamil 22 May 2018, 9:51 am
இமாச்சலபிரதேச பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர்பட்டத்தை ஏற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார்.
Samayam Tamil ramnathkovind-1500981587


இமாச்சலபிரதேசமாநிலத்தில் ஆறு நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்சென்றுள்ளார். இந்த நிலையில், ஒய்.எஸ்.பார்மர்தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தின்பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்புவிழாவில் கலந்துகொண்டு, மாணவர்களுக்குபட்டங்களையும் , சிறந்த மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அறிவியல் துறை சார்ந்த டாக்டர் பட்டம்வழங்கப்பட்டது. ஆனால் இந்த டாக்டர் பட்டத்தைவேண்டாம் என்று மறுத்துள்ளர் ராம்நாத் கோவிந்த். இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் கூறுகையில், ''என்னை மதித்து கவுரவ பட்டம் வழங்கியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் உங்கள் உணர்வை மதிக்கிறேன் .ஆனால் , இத்துறை சார்ந்த தேர்ச்சி எனக்கு இல்லாததால் கொள்கை அடிப்படையில் இப்பட்டத்தைபெற விரும்பவில்லை’’ என்றார்.

மேலும் மாணவரக்ளுக்கு பட்டங்கள் வழங்கியதோடு , மத்திய அரசின்பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி, விவசாயத்துறையில் பல புதிய தொழில்களை துவக்க மாணவர்களை வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி