ஆப்நகரம்

யார் அந்த புதிய ஆளுநர்கள்? - 5 மாநிலங்களுக்கு நியமனம் செய்து உத்தரவிட்ட குடியரசுத் தலைவர்!

ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 1 Sep 2019, 5:31 pm
பதவிக் காலம் நிறைவு உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு மாநில ஆளுநர்கள் அவ்வப் போது மாற்றப்படுவதும், புதிதாக நியமிக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில் தெலங்கானா, கேரளா, இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
Samayam Tamil New Governors


இதுதொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். அதன்படி, இமாச்சல் பிரதேச மாநில ஆளுநராக இருந்த பாஜக மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜக ஸ்பெஷல் அறிவிப்பு..!

முன்னதாக ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்யாண் சிங் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இமாச்சல் பிரதேச மாநில ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப் பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக பகத் சிங் கோஷ்யாரி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கேரள மாநில ஆளுநராக ஆரிஃப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கேரள ஆளுநராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவின் ஆளுநரானாலும் தமிழகத்திற்கு என்றும் நான் சகோதரி - தமிழிசை

இவரது பதவிக் காலம் வரும் 5ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. தெலங்கானா மாநிலத்திற்கு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு ஈ.எஸ்.எல்.நரசிம்மன் ஆளுநராக பதவி வகித்து வந்தார். இவரது பதவிக் காலம் முடிவதால், புதிய ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வண்ணம் இருக்கின்றன.

காங்கிரஸ் குடும்பத்தில் ஒரு பாஜக தலைவர்- தமிழிசை கடந்து வந்த அரசியல் பாதை...!

அடுத்த செய்தி