ஆப்நகரம்

மழையில் நனைந்தாலும் பரவாயில்லை; அணிவகுப்பை ஏற்ற குடியரசுத் தலைவர்; சல்யூட்!

விமானப் படை தினத்தின் அணிவகுப்பு நிகழ்வுகளை மழையிலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

TNN 9 Oct 2017, 3:08 pm
திருவனந்தபுரம்: விமானப் படை தினத்தின் அணிவகுப்பு நிகழ்வுகளை மழையிலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
Samayam Tamil president receives indian air force day parade in rain
மழையில் நனைந்தாலும் பரவாயில்லை; அணிவகுப்பை ஏற்ற குடியரசுத் தலைவர்; சல்யூட்!


இந்திய விமானப் படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் முறையாக கேரளா சென்றார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடைபெற்ற, விமானப் படை ஆண்டுவிழாவில் பங்கேற்றார். குடியரசுத் தலைவர் விமான நிலையத்தில் இறங்கிய போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

அதிலும் கேரள ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர். பின்னர் விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனை மழை என்றும் பாராமல், நனைந்த படியே ஏற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் குடையுடன் ஓடி வந்த போதும், அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து வீரர்களுக்கு சல்யூட் அடித்தபடியே நின்றார்.

கொட்டும் மழையில் நனைந்தபடியே, வீரர்களின் அணிவகுப்பை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

President receives Indian Air Force day parade in rain.

அடுத்த செய்தி