ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீாில் மேலும் 6 மாதத்திற்கு குடியரசுத் தலைவா் ஆட்சி – மத்திய அமைச்சரவை

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் மேலும் 6 மாத காலத்திற்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிப்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 12 Jun 2019, 11:53 pm
ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் மேலும் 6 மாத காலத்திற்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
Samayam Tamil Prakash Javadekar


ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் மெஹபூபா முப்தி அரசுக்கான ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது. இதனைத் தொடா்ந்து கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சட்டப்பிரிவு 92ன் கீழ் 6 மாதகாலம் ஆளுநா் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து அதிகாரங்களுகம் ஆளுரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஜம்மு காஷ்மீா் மாநில ஆளுநா் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று அறிக்கை அளித்தாா். அதன்படி டிசம்பா் 19ம் தேதி முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆளுநா் சத்யபால் மாலிக் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தாா். அவரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவா் ஆட்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, அமா்நாத் யாத்திரை முடிந்த பிறகு தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தொிவித்திருந்தது. அமா்நாத் குகைக் கோவிலுக்குச் செல்லும் புனித யாத்திரை வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறவுள்ளது. தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜம்மு காஷ்மீரில் தோ்தல் நடைபெற மேலும் ஆறு மாதங்களாகும் என்று தொிகிறது.

அடுத்த செய்தி